Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகிறார், யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்!!

Arun Prasath
புதன், 9 அக்டோபர் 2019 (17:41 IST)
சீன அதிபர் வருகையை ஒட்டி, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மாமல்லபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், கலாச்சாரம், வணிகம் ஆகியவை குறித்தும் இருவரும் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்வை ஒட்டி 22 கடலோர மீனவ கிராமங்களிலுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments