கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்பு: கல்வி இயக்குனர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:07 IST)
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமையும் வகுப்பு நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
2022 - 2023 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானதால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
2023 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை வகுப்பு உண்டு என்ற அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பமனு வாங்க ஒருத்தரும் வரலயே!. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்!...

46 தொகுதிகளை கேட்கிறதா பாஜக? அதிமுக தலைமைக்கு இக்கட்டான நிலையா?

வேலையில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.. இந்திய பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்த Realme நிறுவனம்..

பாமக அன்புமணிக்கே! - மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்.. என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

விதிமுறைகளை காட்டி எங்களை முடக்க நினைக்கிறது திமுக!.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments