Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயர்ப்பட்டியலில் திருத்தம்? பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

exam
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (20:34 IST)
பிளஸ் ஒன் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு கால அவகாசம் அளித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
இந்த கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் இருந்தால் அதை பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
பிப்ரவரி 3 முதல் 10ம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்து இருந்தால் தான் இரட்டை இலை: தேர்தல் ஆணையம்