Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் மணிரத்னம் டப்பிங் தியேட்டர் எரிந்து நாசம்

இயக்குனர் மணிரத்னம் டப்பிங் தியேட்டர் எரிந்து நாசம்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (23:42 IST)
மணிரத்னம் தற்போது கார்த்தி நடிப்பில் 'காற்று வெளியிடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். மணிரத்னம், சென்னை அபிராமிபுரத்தில் சொந்தமாக டப்பிங் தியேட்டர் வைத்திருகிறார்.


 


இந்நிலையில், இன்று மதியம் டப்பிங் தியேட்டரில் திடிர் என்று பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த தீவிபத்தில், டப்பிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த மின் சாதன பொருட்களும், ரிக்கார்டிங் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments