Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போத்தீஸ் குடோனில் தீ விபத்து: ரூ.10 மதிப்புள்ள் பொருட்கள் சாம்பல்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (12:57 IST)
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தின் குடோன் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் உள்ளது. இந்த குடோனில் போத்தீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பழையதுணிகள் சேமித்து வைக்கப்படும். இந்த நிலையில் நேற்றிரவு இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக குடோனுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மளமளவென பரவி ஏராளமான துணிகள் தீக்கிரையாகிவிட்டதாக் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாகவும் தீயணைப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments