Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க சொன்னபடி செஞ்சாதான் புதுபடம் ரிலீஸ்! – தயாரிப்பாளர்கள், திரையரங்குகள் மோதல்?

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:55 IST)
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகும் புது படங்கள் உடனே ஓடிடியில் வெளியாவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையரங்குகள் முடங்கியிருந்த சூழலில் தற்போது தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

முன்னதாக திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படம் இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரைப்பட உரிமையாளர்கள் சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களும், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படங்கள் 50 நாட்களும் திரையரங்குகளில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஒப்பந்தமாக தயாரிப்பாளர் சங்கம் ஏற்படுத்தி கையெழுத்திட வேண்டும் திரையரங்க உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருவதால் எதிர் வரும் வாரங்கள் ரிலீஸ் ஆக தயாராக உள்ள படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments