Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம்: முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (07:56 IST)
விவசாயிகள் போராட்டம்: முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என மத்திய அரசு நேற்று கேட்டுக்கொண்டது. இதனை அடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
 
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி அதாவது நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments