Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது அவதூறு பதிவு: பிரபல ஃபேஸ்புக் பயனாளி கைது

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (08:50 IST)
தமிழக ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கு மன்னை சிவா என்பவரை தெரிந்திருக்கும். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளார். டிடிவி தினகரனின் ஆதரவாளரான இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவாக மன்னை சிவா கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும்,  சுதா என்பவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீசார் மன்னை சிவாவை தகவல் தொழில்நுட்பச்சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments