Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் எம்.பி. கே.மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜெயலலிதா அறிவிப்பு

முன்னாள் எம்.பி. கே.மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜெயலலிதா அறிவிப்பு
, வியாழன், 15 மே 2014 (12:35 IST)
தேர்தலுக்கு பிந்தய கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக எம்.பி. கே.மலைச்சாமி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் எம்.பி.யுமான மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறத் தவறும் நிலையில், அது வெளியிலிருந்து கட்சிகளின் ஆதரவை நாடினால், அதற்கு ஆதரவு தருவது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முடிவெடுப்பார்" என்று பேட்டியளித்திருந்தார்.
 
கட்சியின் கொள்கைக்கு விரோதமாக கருத்து தெரிவித்தாக மலைச்சாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil