Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 22 ஜூன் 2024 (11:10 IST)
கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் திடீர் என நேற்று தலைமறைவானார்.  தலைமறைவானதற்கு  என்ன காரணம்? சிகிச்சையில் இருந்த அவர் திடீரென ஏன் மருத்துவமனை விட்டு யாருக்கும் தெரியாமல் ஏன் வெளியேறினார் என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments