Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:26 IST)
கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்  
 
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கூட்டணி குறித்தும் அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவின் இந்த நிலைப்பாடுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments