Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை காணவில்லை : சுவரொட்டிகளை ஒட்டியது சிபிசிஐடி

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (18:44 IST)
சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமாகி இன்றோடு 28 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், முகிலன் மாயமாகிவிட்டதாக சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது சிபிசிஐடி. 
சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலன் சென்னையில் இருந்து மதுரைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு ரயிலில் சென்றார்.  ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவரை கண்டுபிடிக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து  முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில் முகிலனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் பிப்.15-ந் தேதி காணாமல் போய்விட்டதாகவும், அவரை பற்றிய தெரிந்தால் தகவல் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments