Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.ம.மு.க. கட்சி பொறுப்பாளர்கள் வெளியேற்றம்... டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி...ஸ்டாலின் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:50 IST)
இன்னும் சில மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள பிராதான கட்சிகள் தம் கூட்டணி குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களில் தீவிரமாக பிரசாரமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
இன்று முக ஸ்டாலின் தலைமையில் நடந்த இணைப்பு விழாவில் அமமுக கட்சியின் மாவட்டச் செயலர் பருவாச்சி எஸ் . பரணீதரன் மற்றும் மாநில மாணவ்ர் அணி இணைச்செயலாளர் ஈரோடு எம். பிரபு ஆகிய முக்கியமான பொறுபாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
மேலும் இவ்விழாவில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, கரூர் மாவட்டக் கழக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமமுகவில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளதால் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்களால் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments