Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12 வகுப்புகள் பொதுத்தேர்வால் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாறுகிறதா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (14:18 IST)
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு காரணமாக தேர்தல் தேதி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை செய்து வருகிறது. மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பிற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதால் தேர்தல் தேதியை மார்ச் ஏப்ரலுக்கு பின் வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகள் தான் நடப்பதால் தேர்வுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தேர்வு தொடங்கும் முன்பே வாக்கு பதிவை நடத்தி விடலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  
 
தேர்தல் தேதி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments