Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அறிக்கையை சமூக ரீதியாக கொச்சை படுத்தி பதிவு! – வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (12:18 IST)
சட்டமன்ற தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற கலப்பு மண நிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் திமுக சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் சாதி மறுத்து கலப்பு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்கு 8 கிராம் தங்கமும், ரொக்கமாக ரூ.60 ஆயிரம் நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுகவின் இந்த அறிக்கையை சமூகரீதியாக விமர்சித்து சிலர் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்த நிலையில் அவதூறு பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments