மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (12:12 IST)
தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மீண்டும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது 
 
இதனை அடுத்து இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தான் தேர்தல் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே யூகங்களின் அடிப்படையில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு செவிகொடுத்து வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எதிரி.. ஆனா கனிமொழி எனக்கு ஃபிரண்ட்!.. வாழ்த்து சொன்ன விஜய்...

சிறுத்தை தாக்க வந்த பயத்தில் கிணற்றில் விழுந்த விவசாயி.. சிறுத்தையும் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு..!

அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்.. அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்..!

தங்கத்தின் விலை புதிய உச்சம்.. ரூ.1,01,000 தாண்டியது.. வெள்ளியும் ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

தவெக தனித்து போட்டியிட்டால் அதிமுக அல்லது திமுக தான் ஜெயிக்கும்.. விஜய்க்கு படுதோல்வி கிடைக்கும்: அரசியல் விமர்சர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments