Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை! – மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (13:19 IST)
பருவ விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆண்டுதோறும் பள்ளி பாடங்கள், தேர்வுகள் என திரியும் மாணவர்களுக்கு ஓய்வளிப்பது பருவ கால விடுமுறைகளே! அரையாண்டு தேர்வு முடியும் சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டை சேர்த்து மாணவர்களுக்கு 10 நாட்கள் வரை இரண்டாம் பருவ விடுமுறை வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த பருவ விடுமுறையிலும் பல பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்வதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தொடக்க கல்வி இயக்ககம் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அறிவிக்கப்பட்டபடி மாணவர்களுக்கு பருவ விடுமுறை ஆகும். அவர்களுக்கு இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்ககத்தின் இந்த அறிவிப்பால் விடுமுறை நாட்களை முழுதாக கொண்டாடலாம் என்ற மகிழ்ச்சியில் மாணவர்கள் இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments