Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு விவசாயம்னா என்னன்னு தெரியுமா? – எடப்பாடியார் சுளீர் கேள்வி

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:45 IST)
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து ஸ்டாலின் பேசிவருவதற்கு எதிராக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதா குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் மசோதாவிற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளதாக கூறியுள்ள முக ஸ்டாலின், இனிமேல் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என கூறிக்கொள்ள கூடாது என கூறியுள்ளார்.

முக ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? வேளாண் மசோதாக்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மக்களுக்கு பலனளிக்கக்கூடியவை, அதன் சரத்து தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். நான் ஒரு விவசாயியாக இருப்பதால், விவ்சாயிகளுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments