Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்தில் செம பிஸி; பிரதமர் ஆலோசனையில் பங்கேற்காத எடப்பாடியார்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (09:39 IST)
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் காணொலி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதால் இன்று பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments