Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலை, 10 லட்சம் பணம், புதிய வீடு! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:27 IST)
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான இடத்தை சென்று பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேட்டுப்பாளையத்தில் பங்களா ஒன்றின் சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், சுவர் இடிய காரணமான பங்களாவின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் பணம், தகுதியின் அடிப்படையில் அரசு வேலை மற்றும் புதியதாக வீடுகளும் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments