Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னோக்கு திட்டங்களே இல்லை; ஆளுனர் உரை ஏமாற்றமளிக்கிறது! – எடப்பாடியார் வருத்தம்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (12:21 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரை ஏமாற்றம் அளித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும். இந்த கூட்டத் தொடரில் ஆளுனர் வாசித்த உரையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுதல், 15 நாட்களில் குடும்ப அட்டை போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆளுனர் உரை குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ஆளுனர் உரையில் அரசின் முற்போக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை; ஆனால் அதற்கு மாறாக குழுவை அமைத்துள்ளதாக கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments