Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி கவிழும் சூழல் – சசிகலாவிடம் தூதுபோன எடப்பாடி மனைவி !

Webdunia
புதன், 22 மே 2019 (09:12 IST)
தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை பதற்றமடைந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆட்சி பறிபொகும் சூழலில் அதிமுக அரசு உள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க நினைத்த எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமமுக திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என அமமுக தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவிடம் சமாதானம் பேச தனது மனைவியை பெங்களூர் சிறைக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல எடப்பாடி மனைவியும் கடந்த வாரத்தில் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. அதேப்போல துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் மனைவியும் சசிகலாவை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments