Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமதிக்கு 4 ஆண்டு தடை; பறிக்கப்படும் தங்க பதக்கம்?

Webdunia
புதன், 22 மே 2019 (09:01 IST)
கோமதி மாரிமுத்துவின் ஊக்கமருந்து சர்ச்சையால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை மற்றும் அவரது பதக்கம் பறிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.  
 
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முதல்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆனால் இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்வேல் சுமாரிவல்லா அதிகாரபூர்வ தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டை பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். 
கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி, கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், பிசிஐ செய்தி நிறுவனம் இது குறித்து அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோமதி இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரைடம் இருந்து தங்க பதக்கம் பறிக்கப்படுவதோடு, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என உயர் அதிகாரி ஒப்ருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மேலும், ஊக்க மருந்து சோதனையில் கோமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments