Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பெயர் நீக்கம்!? இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடியார்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (09:54 IST)
அதிமுக பொதுக்குழு தொடங்கிய நிலையில் முதல் தீர்மானமாக கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளராக ஜெயலலிதாவின் பெயர் இருந்த நிலையில் நிரந்தர பொதுசெயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. அதை தொடர்ந்து மற்ற பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இடைக்கால பொதுசெயலாளர் பதவி முடியும் வரை மற்ற பொறுப்பாளர்களின் பொறுப்புகளும் நீடிக்கும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசெயலாளர் பதவிக்கு 4 மாதங்களுக்கு பின் தேர்தல் நடத்தப்படும் என்றும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் பொதுக்குழு கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments