Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நாயகன் எப்போதாவது மாடு பிடித்திருக்கிறாரா? – ஓபிஎஸ்ஸை கலாய்த்த துரைமுருகன்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (13:07 IST)
ஜல்லிக்கட்டு நாயகன் என்றழைக்கப்படும் ஓபிஎஸ் என்றாவது மாடு பிடித்துள்ளாரா என திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ”ஓ பன்னீர்செல்வத்திற்கு எதற்கு ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டம். அவர் ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தாரா?” என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ”ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் மீதான தடையை நீக்கியதால் அவருக்கு ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டம் வழங்கப்பட்டது. துரைமுருகன் மாடு பிடிக்க விரும்பினால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஏற்பாடு செய்து தருகிறேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த துரைமுருகன் ”ஓபிஎஸ் ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடு பிடித்தால் நாங்கள் அனைவரும் வந்து நேரில் பார்க்க ஆவலாய் உள்ளோம்” என கூறினார். இரு தரப்பிலும் நடந்த இந்த நகைச்சுவை பேச்சால் சிறிது நேரம் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments