Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுன்னு இல்ல.. எங்கேயுமே அணைக்கட்ட விட மாட்டோம்! – துரைமுருகன் உறுதி!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (12:13 IST)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன் எங்கேயும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருவது கர்நாடக – தமிழகம் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது கர்நாடகாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “அணை கட்டும் பணியை இணக்கமாக நடத்தவே தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அணை விவகாரத்தில் சட்டமும் சாதகமாகவே உள்ளது” என கூறியுள்ளார்.

எடியூரப்பா அறிக்கைக்கு பதிலளித்து பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “மேகதாதுவில் மட்டுமல்ல வேறு எங்கேயும் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அணை கட்டுவதை தடுக்க சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments