Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுன்னு இல்ல.. எங்கேயுமே அணைக்கட்ட விட மாட்டோம்! – துரைமுருகன் உறுதி!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (12:13 IST)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன் எங்கேயும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருவது கர்நாடக – தமிழகம் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மேகதாட்டு அணை கட்டும் முயற்சிகளை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது கர்நாடகாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “அணை கட்டும் பணியை இணக்கமாக நடத்தவே தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். அணை விவகாரத்தில் சட்டமும் சாதகமாகவே உள்ளது” என கூறியுள்ளார்.

எடியூரப்பா அறிக்கைக்கு பதிலளித்து பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “மேகதாதுவில் மட்டுமல்ல வேறு எங்கேயும் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அணை கட்டுவதை தடுக்க சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments