Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் தந்த நெருக்கடி: தேனி கார் ஓட்டுனர் தற்கொலை

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:10 IST)
வங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள் குறிப்பாக தனியார் வங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள் வங்கி ஊழியர்களால் மிரட்டப் படுகிறார்கள் என்றும் அதனால் பலர் தற்கொலை செய்துகொண்டிருப்பதுமான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தேனியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி இருந்த நிலையில் வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்தவர் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முருகன். இவர் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இருந்த நிலையில் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.
 
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தந்த நெருக்கடி காரணமாக அவமானம் அடைந்த முருகன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஓட்டுநர் முருகனை முருகனுக்கு நெருக்கடி தந்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments