Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் சிக்கிய ரூ.4.29 கோடி: 16 அரசு அலுவலர்கள் கைது!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:04 IST)
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடி வருவதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி லஞ்சம் வாங்குபவர்களை பிடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் ஆறாம் தேதி வரையிலான காலத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் அரசு அலுவலகங்களில் மட்டும் ரூபாய் 4.2 கோடி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனையில்  ரூபாய் 4.2 கோடி லஞ்சப்பணம் சிக்கியுள்ளது. மேலும் சோதனையில் லஞ்சம் பெற்றதாக பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது 
 
ஒரே மாதத்தில் நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சப் பணம் சிக்கியதும், 16 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments