Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணினத்திற்கு திராவிட கழகம் வழங்கிய அதிகாரக்கொடை - முதல்வர் முக.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (18:05 IST)
திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ''எல்லார்க்கும் எல்லாம் என்ற   நோக்கத்துடன் செயல்படும் திராவிட மாடலின் அனைத்து திட்டங்களுக்கும் ஒரு பொது நோக்கு உண்டு, அதுதான் சமூக நீதி. நீதிக்கட்சி தொடங்கி இன்றுவரை தமிழகத்தை  வழி நடத்தும் கோட்பாடு சமூக நீதி. சாதிய ஏற்றத்தாழ்வு,  ஆண் பெண் வேறுபாடுபாட்டை விதைக்கும் பால் பேதமும் இந்தியாவின் சமூக வளர்ச்சியை தக்கும் சக்தியாக காலம்காலமாக உள்ளது.

சமூகத்தின் சரி பங்காக இருக்கும் மகளிரின் வாழ்க்கை தரம், சுயமரியாதையும்   இதுபற்றி நான் அதிகமாக விளக்கத் தேவையில்லை.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டுமென்று  1929 ஆம் ஆண்டு  நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்   தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதை 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் சட்டமாக நிறைவேற்றினார். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட கழகம் வழங்கிய அதிகாரக்கொடை'' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments