Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: இலங்கைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (11:54 IST)
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிங்களப்படையால் கைது செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 
 
வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!
 
சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது  செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது!
 
கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞருக்கு சிறை.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

உணவு சரியில்லை என கூறி ஊழியரை அடித்த எம்.எல்.ஏ.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

24 வயது இளைஞருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த கும்பல்.. தகாத உறவால் விபரீதம்..!

விண்வெளிக்கு சென்ற கஞ்சா விதைகள் பசிபிக் கடலில் கலந்தது! - Impossible ஆன Mission Possible!

அடுத்த கட்டுரையில்
Show comments