Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்.. வருடம் முழுவதும் சீசன் தான்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (08:48 IST)
குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன் என்றும் அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கும் நிலையில் அந்த அருவிகளில் சீசன்களில் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் ஆனால் தான் புதிய அருவியை உருவாக்கி வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்

இதனால் வருடம் முழுவதும் சீசன் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள வணிகம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றாலத்தை உலகத்தரம் மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முடியாது என்றும் நான் வெற்றி பெற்று எம்.பி ஆனால் உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments