Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (08:41 IST)
அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பதை அடுத்து அந்த குடும்பத்தின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தேர்தல் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள புலாகுரி நேபாளி பாம்  என்ற பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதில் ஒரு குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் இருப்பதாக தெரிகிறது. 54 ஆண்டுகளுக்கு மேல் கிராம தலைவராக இருக்கும் ராம் பகதூர் என்ற குடும்பத்தில் தான் 350 வாக்காளர்கள் உள்ளன

இவருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள் மற்றும் ஒன்பது மகள்கள் உள்ளதாகவும் 56 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குடும்பத்தில் உள்ள சிலர் நன்றாக படித்து பல மாநிலங்களில் வேலை செய்து வருவதாகவும் ஓட்டு போடுவதற்காக தற்போது அனைவரும் வீட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது

சுமார் 350 வாக்காளர்கள் உள்ள மிகப்பெரிய குடும்பம் என்ற பெயர் பெற்றுள்ள இந்த குடும்பத்தின் ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments