செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (17:37 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கேட்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக் மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
அதேபோல் மது பாட்டில் விற்பனையில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை போன முதலமைச்சர் முக ஸ்டாலிலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும் டாஸ்மாக் கடைகளை முழுவதாக மூட வேண்டும் என்றும் 19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும் என்றும் மதுபான விற்பனை தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரை வலியுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments