Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (07:58 IST)
சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற நோய் வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸை  மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் மிக வேகமாக மெட்ராஸ்-ஐ பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ்-ஐ  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐந்து நாட்களில் இது குணமடையும் என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மெட்ராஸ் ஐ நோய் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments