Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (13:18 IST)
டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல்  12 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் பிற  மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில்  மருத்துவர்கள் உரிய நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments