Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இதற்கு மேல் லண்டனுக்கு வாங்க: டாக்டர் ரிச்சர்ட் திட்டவட்டம்!

என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இதற்கு மேல் லண்டனுக்கு வாங்க: டாக்டர் ரிச்சர்ட் திட்டவட்டம்!

Advertiesment
என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இதற்கு மேல் லண்டனுக்கு வாங்க: டாக்டர் ரிச்சர்ட் திட்டவட்டம்!
, செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 47 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்து விட்டார் அவரது டிஸ்சார்ஜை அவரே முடிவு செய்வார் என பிரதாப் ரெட்டி பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
ஆனால் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பழைய தெம்புடன் வருவாரா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. அவருக்கு எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு, எழுதுவதற்கு என பயிற்சிகள் அளிக்கப்படுவதாக செய்திகள் வருவது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்னதாக சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலெ அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். ஆனால் சசிகலா தரப்பு போயஸ் கார்டனில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தன்னால் முடிந்த வரை சிகிச்சை அளித்து விட்டதாகவும், இதற்கு மேல் அவரது உடல் நிலையை வலுப்படுத்த வேண்டுமானால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அழைத்து செல்ல வேண்டும். அங்கு மேலும் பல வசதிகள் உள்ளன அதன் மூலம் முதல்வருக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியும் என டாக்டர் ரிச்சார்ட் ஜான் பீலே கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி அறிவிப்பு