Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமாண்டமான அரங்கம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திமுக இளைஞரணி மாநாடு..!

Siva
திங்கள், 22 ஜனவரி 2024 (07:20 IST)
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழனாகப் பெருமை கொள்வதாக நெகிழ்ந்த ‘பந்தல்’ சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டதாகவும்,  இந்த அரங்கத்தில் 1.5 லட்சம் பேர் அமர்ந்து மாநாட்டை பார்த்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 
இந்த சாதனை குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சாதனையை சாத்தியமாக்கிய அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி எனவும், தமிழனாகப் பெருமை கொள்வதாகவும் கூறினார்.
 
இந்த சாதனை தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு காட்டியுள்ளது. தமிழக இளைஞர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கையை இந்த சாதனை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments