Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் டோட்டலி அப்செட்! கேட்டும் கொடுக்காத ஸ்டாலின்...

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (13:01 IST)
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது. 
 
நடந்து முடிந்த தேர்தல் தமிழகத்தில் திமுக அமோக வெற்றியை பெற்றது. திமுகவின் வெற்றி தோல்வியில் சரிந்த காங்கிரஸுக்கு சற்று பலமாக இருந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுகவிற்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.  
 
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் போட்டி என அறிவிக்கப்ப்ட்டுள்ளது. மேலும் மூன்று இடங்களில் ஒரு இடம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  
திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சியினர் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனராம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்ப்பார்த்தது. 
 
கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங், ஆனால் இம்முறை காங்கிரஸுக்கு அசாமில் போதிய பலம் இல்லாததால் திமுக உதவியை நாடியது. 
 
அப்போது பதில் ஏதும் கூறாத திமுக தரப்பு இப்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களையும் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments