திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:59 IST)
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது என்றும் இரு கட்சிகளும் ஒட்டவே ஒட்டாது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் வளைத்து போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இரு கூட்டணியிலும் பேரம் பேசி வரும் தேமுதிக, தற்போது அதிமுக கூட்டணியை நெருங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் செய்திகளிடம் கூறியபோது, 'அதிமுக அமைத்துள்ளது ராஜ்ய கூட்டணி என்றும், திமுக அமைத்துள்ள கூட்டணி ஜீரோ கூட்டணி என்றும் ஜீரோவோடு எது சேர்ந்தாலும் ஜீரோதான் என்றும் கூறியுள்ளார். 
 
மேலும் பாஜகவிற்கு 5 சீட் கொடுத்த அதிமுக அடிமையா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் கொடுத்த திமுக அடிமையா? என மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களைப் பார்த்து பொதுமக்கள் அவரை கிண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments