Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? தேமுதிக விளக்கம்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:24 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து தேமுதிக விளக்கமளித்துள்ளது
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே 
 
குறிப்பாக சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் பூரண குணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அவரது உடல் நலத்திற்கு என்ன என்ற அச்சம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வேறு எந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments