Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தேர்தலில் ஏமாந்துட்டோம்…. ஆனா உள்ளாட்சி தேர்தல்ல ? – அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (12:23 IST)
மக்களவைத் தேர்தலை போல அல்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கால் பங்கு சீட்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்ற தேமுதிக கம்மியான சீட்களை வாங்கி போட்டியிட்டது. அது அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி விஜயகாந்த் கட்டுப்பாட்டை விட்டு அவரது மனைவி மற்றும் மைத்துனர் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதுபோல ஏமாறக்கூடாது என்பதற்காக இப்போதே தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தேர்தல் சீட்களில் 25 சதவீதத்தை கேட்டுள்ளதாகவும் அதைக்கேட்டு அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள் இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முடிவெடுப்பார் என சொல்லி இப்போதைக்கு பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளனர். அவர்கள் சார்பில் 10 சதவீத இடத்துக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments