Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு செல்ல உதவிய மாவட்ட ஆட்சியர்!

J.Durai
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:46 IST)
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கலந்து கொண்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்‌ ஆர்.அழகு மீனா நிகழ்ச்சியை முடித்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
 
குமாரகோவில் சந்திப்பு அருகே  இருசக்கர வாகனமும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களும் பலத்த காயங்களுடன் சாலையோரம் படுத்திருந்தனர்.
 
அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்படும் என கருதி மனிதா பிமானத்தோடு அந்த இரு வாலிபர்களையும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக வாகனத்தில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
 
மேலும் உடனடியாக மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments