Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனிக்கு காவடி எடுப்போம், அண்ணாமலைக்கு காவடி தூக்க மாட்டோம்: திண்டுக்கல் சீனிவாசன்..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:12 IST)
பழனி முருகனுக்கு காவடி எடுப்போம், ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காவடி எடுக்க மாட்டோம் என அதிமுக பிரமுகர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின்னர் அண்ணாமலை உள்பட பாஜகவினரை அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி  உள்ளிட்டோர் கடுமையாக அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

ALSO READ: இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள். அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

 இந்த நிலையில் பாஜக கூட்டணி முடிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் வருங்கால முதலமைச்சர் என பாஜக கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் பழனிக்கு முருகனுக்கு காவடி இருப்போம் ஆனால் அண்ணாமலைக்கு காவடி தூக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறினார். இதற்கு பாஜகவினர் என்ன பதிலே கொடுக்கப் போகின்றனர் என்பதை ஒரு திறந்து பார்ப்போம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments