Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை மட்டும் குடுங்க.. செலவை நான் பாத்துக்கறேன்! – ஒலிம்பிக் செல்லும் தனலெட்சுமி கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (16:49 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தனலெட்சுமி தனது தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்திலிருந்து 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில் தடகள பிரிவில் போட்டியிட திருச்சியை சேர்ந்த தனலெட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தனலெட்சுமி தான் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்க செல்ல 20 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், தமிழக அரசு தனக்கு ஒரு அரசு பணி அளித்தால் தனக்கான செலவுகளை தானே பார்த்துக் கொள்வதாகவும், பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments