Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:30 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக அரசின் சீரிய முறையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
தமிழக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் கொரோனா வைரஸ் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கூறியபோது, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments