Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம்; அறநிலையத்துறை உறுதி

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (18:14 IST)
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விவகாரத்தில் சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆனால் பல்லாண்டு காலமாக  பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மேலும் அறநிலையத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கை சமஸ்கிரதம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்துவது பற்றி உயர் நீதிமன்றத்தி அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் சமஸ்கிரதத்திற்கு இணையாக தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments