Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தை பார்த்தால் கூட பயம் என்றால் அவர்தான் ஜெயலலிதா; தீபா டுவீட்

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (16:40 IST)
படத்தை பார்த்து கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா என்று தீபா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 
நாளை ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை இதற்காக எடப்பாடி அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ஜெ.தீபா ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:-
 
அவர் என்றும் மக்கள் முதல்வர், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அம்மா என்ற சொல் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். கடைசியில் ஒன்று தெரிகிறது படத்தை பார்த்து கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா. அம்மாவின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments