Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காக்க வைத்து கதவை சாத்திய தீபா - காரில் ஏறிப்போன மாதவன்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:46 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே எழுந்துள்ள பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.


 

 
சசிகலாவின் தலைமையை விரும்பாத அதிமுகவினர் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பக்கம் சென்றனர். எனவே, அவரும் அரசியலில் குதிப்பதாக கூறினார். அதன்பின் பேரவையை தொடங்கினார்.  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.
 
அந்நிலையில் தொடக்கம் முதல் அவருடன் இருந்த அவரின் கணவர் மாதவன், திடீரெனெ தனியாக கட்சி தொடங்கப் போகிறேன் எனக் கூறினார். மேலும், தீபா தீயவர்களின் பிடியில் சிக்கியுள்ளார் என பேட்டியும் கொடுத்தார். இது தீபாவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது தொடர்பாக நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தீபா பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரின் கணவர் தீபா வந்தார். அவரைப் பார்த்தவுடன், அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என சிலரிடம் தீபா கூறினார். ஆனால், அங்கிருந்து செல்லாமல் செய்தியாளர்கள் அருகிலேயே மாதவன் நின்று கொண்டிருந்தார்.
 
அதன் பின் செய்தியாளர்கள் கூட்டம் முடிந்ததும் தனது வீட்டுக் கதவுகளை மூடிக் கொண்டு தீபா உள்ளே சென்று விட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் மாதவன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு  அதன்பின் காரில் ஏறி சென்று விட்டார்.

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments