ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

Mahendran
திங்கள், 25 நவம்பர் 2024 (15:54 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்ப்போம்.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென்கிழக்கு சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இலங்கை மற்றும் நாகப்பட்டினம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏதாவது ஒரு பகுதியில் கரையை கடக்கும் என்றும், சரியான கரையை கடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல் விரைவில் கணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட், டாடா பெயர்களில் சாலைகள்.. முதல்வர் அதிரடி முடிவு..!

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments