Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (10:34 IST)
வடகிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை உள்பட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி, புயலாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது . இதையடுத்து சென்னை நாகப்பட்டினம் உள்பட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்களை அறிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழே வருமா?

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments